நல்லிணக்க செயற்பாடுகளுக்கான கலந்துரையாடல் காத்தான்குடியில்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலக குழுவினருக்கும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று நெற்று 5ஆம் திகதி மாலை 05:00 மணி தொடக்கம் மாலை 06:30 மணி வரை சம்மேளன கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.

அந்தவகையில், இனநல்லிணக்கத்தினை மேம்படுத்துவதற்கான பல்வேறு காத்திரமான விடயங்கள்
கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு தடையாகவுள்ள பல்வேறு அம்சங்களும் உதாரணங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டது.

அத்தோடு காத்தான்குடி பிரதேச மற்றும் அதனைச் சூழவுள்ள பொது மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் மற்றும் சவால்களை நிவர்த்திப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அத்துடன், எதிர்காலத்தில் அமையப் பெறவுள்ள இவ் ஆணைக்குழுவின் சட்டவரைபில் உள்ளீர்க்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

மேற்படி, அமர்வில் உண்மை நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலக குழுவின் பணிப்பாளர் கலாநிதி. சட்டத்தரணி. அசங்க குணவர்தன, அதனது கொள்கை பிரிவு தலைவர் யுவி தங்கராஜா மற்றும் சிரேஷ்ட அதிகாரியொருவரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...