நாடு முழுவதும் இருளில் மூழ்கும் மூழ்கும் அபாயம்: மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்!

Date:

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03) முதல் மூன்று நாட்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெறுமாறு மின்சக்தி அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சாரசபையை ஜனாதிபதியுடன் சேர்ந்து மின்சக்தி அமைச்சர் விற்பனை செய்வதற்கு விரும்புவதாகவும், குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக நிறைவேற்றப்படுமாயின் பாரிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பாரியளவிலான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...