நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் போக்குவரத்து நடவடிக்கை பாதிப்பு

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தமையால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மாத்தளை உக்குவெல – பண்டாரபொல வீதி, பல்லேபொல – கொஹொல்லன்வல வீதி ஆகியவற்றின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளது.

மேலும், லக்கல – ரிவஸ்டன் வீதி ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...