நாளை முதல் வைத்தியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு !

Date:

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை இந்த மாதம் முதல் 35,000 ரூபா முதல் 70,000 ரூபா வரை அதிகரிப்பதாக அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது.

எவ்வாறாயினும், குறித்த மேலதிக கொடுப்பனவை வழங்காதிருப்பதற்கு தற்சமயம் அரசாங்கம் தீர்மானித்துள்ளதன் அடிப்படையில், தாம் நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதேநேரம், வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா மேலதிக கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென கோரி, தாதியர்கள், ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் என சுமார் 70இற்கும் அதிகமான மருத்துவ துறைசார் தொழிற்சங்கத்தினர் அண்மையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...