பஹன அகடமி ஏற்பாட்டில் மல்வானை யடிஹேன அல்முஸ்தபா வித்தியாலயத்தில் செயலமர்வு!

Date:

மல்வானை யடிஹேன அல்முஸ்தபா மகா வித்தியாலயத்தில் பஹன மீடியா நிறுவனத்தின் பஹன அகடமி ஏற்பாடு செய்யும் தொடர்பாடல் நுட்பங்களுல் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் தொடர்பான ஒரு நாள் செயலமர்வு எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.எம். முஹம்மத் சம்ரிஹான் (நளீமி) தலைமையில் நடைபெறும் இச்செயலமர்வில் நியூஸ்நவ் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் மொஹமட் பியாஸ், முன்னாள் ஊடகத்துறைப் பணிப்பாளர் மாத்தியக்கீர்த்தி ஹில்மி முஹம்மத் (எஸ்.எல்.ஏ.எஸ்), ஊடகத்துறை முதுமாணிப் பட்டதாரி பவாஸ் அன்பியா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

கருத்தரங்கின் இறுதியில் நடைபெறும் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பஹனமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முஜிப் ஸாலிஹ் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

தொடர்பாடல் வழிமுறைகளால் மாணவர்களை வலுவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் தொடர்பாடல் நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் எதிர்காலப்பயன்பாடு மற்றும் சமூக ஊடகத்தைக் கல்விக்காகப் பயன்படுத்தல் முதலான விடயங்கள் போதிக்கப்பட்டுள்ளன.

பஹன அகடமியானது மாணவர்களையும் இளைஞர்களையும் ஊடகம் சார்ந்த துறையில் வலுவூட்டும் வகையில் AI பாடநெறி, MOJO மற்றும் உலமா ஜெர்னலிஸம் ஆகிய தலைப்புக்களிலும் தொடர் கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு: இலங்கை விஜயத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில்

 விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர்...

பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களமானது அடுத்த 36 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும் புதிய வானிலை அறிவிப்பை...

ஈரானின் புதிய ஜனாதிபதியாக மொஹமட் முக்பர்..!

ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி நேற்றைய தினம் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில்...

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு...