பாடசாலை ஆரம்பிக்கப்படும் திகதியில் மாற்றம்!

Date:

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

இருப்பினும், கல்விப் பொதுத்தராதர உயர்தர விவசாய விஞ்ஞான பாட வினாத்தாள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து குறித்த பரீட்சையினை மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தர விவசாய விஞ்ஞான பாட வினாத்தாளின் இரண்டாம் பகுதி பெப்ரவரி மாதம் முதலாம் திகதி காலை 8.30 முதல் 11.40 வரை நடைபெறவுள்ளது. அத்துடன், முதல் பகுதி குறித்த தினத்தின் பிற்பகல் 01.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...