புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளியின் 52 வது ஆண்டு நிறைவும் வருடாந்த கலை விழாவும்!

Date:

புத்தளம் நகரில் தமிழ் மொழி மூலம் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட ஐ.எப்.எம். முன்பள்ளியின் 52 வது ஆண்டு நிறைவோடு கூடிய, அதன் வருடாந்த கலை விழா நிகழ்வுகள் இம்மாதம் 31ம் திகதி புதன்கிழமை மாலை 03 மணிக்கு புத்தளம் நகர மண்டபத்தில் அதன் பொறுப்பாசிரியை திருமதி எம்.எஸ்.பௌசுல் ரூஸி சனூன் தலைமையில்  இடம்பெறவுள்ளது.

புத்தளம் நகரில் தமிழ் மொழி மூல முன்பள்ளிகள் எதுவுமே இல்லாத ஒரு கால கட்டத்தில் 04.02.1972 ம் ஆண்டு இந்த ஐ.எப்.எம். முன்பள்ளி புத்தளத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் 21 மழலை சிறார்கள் தமது கன்னி திறமைகளை அரங்கத்தில் வெளிக்கொணர உள்ளார்கள்.

“நாம் இல்லையேல் நாளை என்பதும் இல்லை” என்பது இந்த வைபவத்தின் தொனிப்பொருளாகும்.

நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைத்து பிள்ளைகளுக்கும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர்கள், நகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள், நகர சபை செயலாளர், நகர சபை அதிகாரிகள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள், சமய தலைவர்கள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஏனைய முன்பள்ளிகளின் ஆசிரியைகள், ஐ.எப்.எம்.பழைய மாணவர் எனும் மகுடம் சூடியுள்ள சமூகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த ஐ.எப்.எம். முன்பள்ளியானது புத்தளம் நகரில் பல உயர் பதவிகளை வகிக்கின்ற பலரை உருவாக்கிய பெருமையோடு இன்றும் சேவையாற்றி கொண்டிருப்பதானது இதன் வரலாற்று சாதனையை பறை சாட்டுகிறது.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பித்து மழலை செல்வங்களுடைய திறமைகளுக்கு உற்சாகமளிக்குமாறு முன்பள்ளி பொறுப்பாசிரியை எம்.எஸ். பௌசுல் ரூஸி சனூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...