ஹமாஸ் இன்னும் பலம் இழக்கவில்லை; இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் பலத்துடன் உள்ளனர்: புலனாய்வு அமைப்புகள் தகவல்

Date:

இஸ்ரேலின் மூன்று மாதகால தாக்குதலுக்கு பின்னர் ஹமாஸ் அமைப்பு வலுவிழக்கவில்லை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல மாதங்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு ஹமாஸ் அமைப்பு பலத்துடன் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

20 முதல் 30 சதவீத போராளிகளை மட்டுமே ஹமாஸ் அமைப்பு இழந்துள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பு இன்னும் வலுவுடன் உள்ளதாகவும் தனது தந்திரங்களை மாற்றியமைந்து தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களாக நடைபெறும் போரில் தமது தாக்குதல்களில் 16 ஆயிரம் ஹமாஸ் போராளிகள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் 10 ஆயிரத்து 500 முதல் 11 ஆயிரத்து 700 வரையான போராளிகளே காயமடைந்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் விரைவில் போர் களத்திற்கு திரும்பலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...