12 வயதிற்குட்பட்ட தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொட்டாராமுல்லை அல்ஹிரா பாடசாலை மாணவர்கள் தெரிவு!

Date:

12 வயதின் கீழ் பாடசாலைகள் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொட்டாராமுல்லை அல்ஹிரா பாடசாலையில் இருந்து இரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் Renown உதைபந்து அகடமியின் ஆதரவுடன் 12 வயதிற்குட்பட்ட பாடசாலைகள் தேசிய உதைபந்தாட்ட அணிக்கான (ஆண்கள்) வீரர்கள் தெரிவு நேற்று (22) கொழும்பு Racecourse மைதானத்தில் காலை 7 மணி முதல் நடைபெற்றது.

இந்த தெரிவுக்காக ஒரு பாடசாலையில் இருந்து 2012/2013 ஆம் ஆண்டுகளில் பிறந்த சிறந்த வீரர்கள் இருவர் தெரிவு செய்து அனுப்பப்பட்டனர்.

இதேவேளை  ‘எமது பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்த M. M. Mohammed Sakeef மற்றும் T. Safeen Ahmed ஆகிய இரண்டு மாணவர்களும்  தேசிய அணிக்கு தெரிவாகி பாடசாலைக்கும் எமது ஊருக்கும் பெருமை சேர்த்து தந்திருக்கின்றார்கள் என  பாடசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...