12 வயதிற்குட்பட்ட தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொட்டாராமுல்லை அல்ஹிரா பாடசாலை மாணவர்கள் தெரிவு!

Date:

12 வயதின் கீழ் பாடசாலைகள் தேசிய உதைபந்தாட்ட அணிக்கு கொட்டாராமுல்லை அல்ஹிரா பாடசாலையில் இருந்து இரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் Renown உதைபந்து அகடமியின் ஆதரவுடன் 12 வயதிற்குட்பட்ட பாடசாலைகள் தேசிய உதைபந்தாட்ட அணிக்கான (ஆண்கள்) வீரர்கள் தெரிவு நேற்று (22) கொழும்பு Racecourse மைதானத்தில் காலை 7 மணி முதல் நடைபெற்றது.

இந்த தெரிவுக்காக ஒரு பாடசாலையில் இருந்து 2012/2013 ஆம் ஆண்டுகளில் பிறந்த சிறந்த வீரர்கள் இருவர் தெரிவு செய்து அனுப்பப்பட்டனர்.

இதேவேளை  ‘எமது பாடசாலையை பிரதிநிதித்துவம் செய்த M. M. Mohammed Sakeef மற்றும் T. Safeen Ahmed ஆகிய இரண்டு மாணவர்களும்  தேசிய அணிக்கு தெரிவாகி பாடசாலைக்கும் எமது ஊருக்கும் பெருமை சேர்த்து தந்திருக்கின்றார்கள் என  பாடசாலை நிருவாகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...