2023 இல் 13.5 மில்லியனுக்கும் அதிகமானோர் உம்ரா யாத்திரை!

Date:

2023 ஆம் ஆண்டில் 13.5 மில்லியனுக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் உம்ரா யாத்திரையை மேற்கொண்டதாக சவூதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட அல்-அரேபிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு உம்ரா யாத்திரையை அதிகளவான சர்வதேச யாத்ரீகர்கள் மேற்கொண்டதாக சவூதி அரேபிய இராச்சியத்தின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தவ்ஃபிக் அல்-ரபியா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கை 58 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அதன் முந்தைய ஆண்டை விட (2022) மொத்தம் 5 மில்லியன் யாத்ரீகர்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உம்ரா என்பது சவூதி அரேபியாவில் உள்ள மாக்காவுக்கு இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஒரு புனித யாத்திரையாகும்.

இது குறிப்பிட்ட திகதிகளைக் கொண்ட ஹஜ் யாத்திரையினை போலன்றி, ஆண்டின் எந்த நேரத்திலும் மேற்கொள்ளப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...