‘Yes or No’:நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து குறுஞ்செய்தி மூலம் அறிவிக்குமாறு வேண்டுகோள்!

Date:

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து பொது மக்களின் ஆலோசனைகளை பெறுவதற்கு சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் OSB ‘YES’ எனவும் இல்லை எனில் OSB ‘NO’ எனவும் பதிவிட்டு 0767 001 001 எனும் இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது நேரடி ஜனநாயக முயற்சியின் ஒரு பகுதியாக எனவும், நாட்டு மக்கள் அரசாங்கத்தின் கொள்கைகளில் நேரடியாக வாக்களிப்பதற்கு அனுமதிக்கும் எனவும் நம்பப்படுகிறது.

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், ஊழலுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கும் ஊடகவியலாளர்களை ஒடுக்கவும், தகவல் தொழில்நுட்பத் துறையை பாதிக்கவும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் என சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...