இந்தியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட ஜம்இய்யாவின் பிரதிநிதிதிகளுடன் சந்திப்பு!

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இந்தியாவுக்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகருமான அசோக மிலிந்த மொறகொட அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிதிகளுடன் சிநேகபூர்வ சந்திப்பொன்றை இன்று (09)  மேற்கொண்டார்.
 ஜம்இய்யாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஜம்இய்யாவின் பதில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதன்போது நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் ஜம்இய்யா சார்பில் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி, உப தலைவர்களுள் ஒருவரான அஷ்-ஷைக் எச். உமர்தீன், உப செயலாளர்களான அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், அஷ்-ஷைக் ஏ.ஸீ.எம். பாஸில் ஹுமைதி மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ், அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான், அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர், அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், அஷ்-ஷைக் என்.எம். ஸைபுல்லாஹ் ஆகியோருடன் ஜம்இய்யாவின் உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...