எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்து: தென் கொரியாவில் பதற்றம்!

Date:

தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியாங் (Lee Jae-myung) மீது கத்திக் குத்துத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூசன் நகரில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மர்ம நபரொருவரால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தாக்குதலினால் படுகாயமடைந்த எதிர்க் கட்சித்தலைவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலை தற்போது கவலைக்கிடமாகவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தாக்குதலை மேற்கொண்ட குற்றச் சாட்டில் 50 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வலுவான பங்கு வகித்த லீ ஜே மியாங் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...