காசாவில் போர் நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

Date:

எகிப்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு இடையே வார இறுதியில் இடம்பெற்ற சந்திப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்க்கு இடையேயான போர்நிறுத்தம் மற்றும் காசாவில் பலஸ்தீனிய குழுக்களால் சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை குறித்த தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வார இறுதியில் மூன்று நாடுகளின் உளவுத் தலைவர்கள் சந்திப்பை மேற்கொண்டதாக கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளை முதலில் விடுவிப்பது மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக போர்நிறுத்ததை அமுல்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக கட்டார் பிரதமர் கூறியுள்ளார்.

இதேநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்நிபந்தனையாக நிரந்தர போர் நிறுத்தத்தை ஹமாஸ் கோரியதாகவும் கட்டார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...