சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளரை நாட்டுக்கு அழைக்க தான் தயாராக இருப்பதாகவும், மாற்று யோசனைகள் இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் கலந்துரையாட முன்வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
கொழும்பு சுங்கத் தலைமையகத்தில் இன்று (26) நடைபெற்ற சுங்கத் தின நிகழ்வில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வாக்குறுதி அரசியலே நாட்டின் பொருளாதாரத்தை அழிவுக்கு இட்டுச் சென்றது எனவே, தேர்தல் ஒன்றுக்கு தயாராகும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டத்தைத் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.