சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கடன் தவணைக்காக முன்வைக்கப்பட்டுள்ள 75 புதிய நிபந்தனைகள்!

Date:

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள இரண்டாம் தவணை கடன் தொகைக்காக 75 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

முன்னதாக வழங்கப்பட்ட முதலாம் தவணை கடன் தொகை தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த நிபந்தனைகளில் இலங்கை அரசாங்கம் இதுவரை பூர்த்தி செய்யாத 27 நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை புதுப்பிக்க அல்லது நீடிக்கவும் சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நாணய நிதியத்தின் முதலாம் தவணைக் கடன் தொகை வழங்கப்பட்ட போது, இலங்கை அரசாங்கத்திடம் 73 நிபந்தனைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டின் நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய குறித்த 73 நிபந்தனைகளில் 60ஐ இலங்கை தாமதத்துடன் நிறைவேற்றியுள்ளது என்றும் நிறைவேற்றப்படாத 13 நிபந்தனைகளில் 8 நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதியுள்ள 5 நிபந்தனைகள் கடுமையான நிபந்தனைகள் என்பதால் அவற்றை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படுவதாக அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதன்படி, 75 புதிய நிபந்தனைகளும், கடந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 27 நிபந்தனைகளும், நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 8 நிபந்தனைகளும் ஒன்றிணைக்கப்பட்டு இரண்டாம் தவணைக் கடன் தொகைக்காக 110 நிபந்தனைகள் தற்போது விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...