சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டும் மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 174 பேர் பலி

Date:

இனப்படுகொலைகளை தவிர்க்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு 24 மணி நேரம் கூட முடிவடையாத நிலையில் இஸ்ரேல் காஸா மீது நேற்று மிக மோசமான தாக்குதலை நடத்தியுள்ளது.

ஹமாஸ் போராளிகளுடன் நடந்து வரும் போரில் மக்களைக் கொல்வதையும், அழிப்பதையும் தவிர்க்கவும், இனப்படுகொலையை தவிர்க்கவும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், காஸா மீது இஸ்ரேல் மீண்டும் இந்த கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இஸ்ரேல் படையினரின் தாக்குதல் 24 மணி நேரத்தில் 174 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 310 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.

காஸாவின் ரஃபாவில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மீது நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...