பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தொடர் விசாரணை

Date:

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (30) தொடர்ந்து மூன்றாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தீர்ப்பளிக்குமாறு கோரி இதுவரை 31 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர், மாற்றுக் கொள்கைக்கான நிலையம், சோசலிச இளைஞர் சங்கம், முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ, இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் , இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

உத்தேச மசோதாவின் சில சரத்துகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக இருப்பதால், இந்த மனுக்கள், பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும், சர்வஜன வாக்கெடுப்பு மூலமாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறும் நிலையில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, ஏ. எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணை இடம்பெற்றது.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...