பாராபட்சமற்ற விசாரணைக்காக அரபுக்கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது: முஸ்லிம் சமய திணைக்களம் அவசர நடவடிக்கை!

Date:

தென் மாகாணத்தின் வெலிகம பகுதியிலுள்ள பிரபலமான அரபுக்கல்லூரி ஒன்றில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆசிரியர் ஒருவரால் மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதையடுத்து இது தொடர்பாக முறையான விசாரணை முடிவுறும் வரை கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மேற்படி சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை விசாரணை செய்ய திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே திணைக்களத்தின் விசாரணை முடியும் வரை இன்று முதல் தற்காலிகமாக கல்லூரியை மூடி பாதுகாப்பாக மாணவர்களை பெற்றோர்கள், பாதுகாவலர்களிடம் ஒப்படைக்குமாறும் திணைக்களத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...