புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமாக பண அனுப்பல் அதிகரிப்பு

Date:

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலமாக கடந்த ஆண்டு (2023) மொத்தம் 5,969.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 57.5% அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறித்த அறிக்கையின் படி 2023 டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இலங்கை மொத்தம் 569.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈர்த்துள்ளது.

2002 ஆம் ஆண்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட தொகை 3,789.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தது.இந் நிலையில் அதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார குறிகாட்டிகள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நேர்மறையான அறிகுறிகளைக் காட்டியுள்ளன.

70% க்கும் அதிகமான பணவீக்க வீதத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக முத்திரை குத்தப்பட்ட இலங்கை, 2023 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் பணவீக்கத்தை சுமார் 3% ஆகக் குறைத்தது.

2024 ஆம் ஆண்டில் பணவீக்கம் 5% விடவும் குறைந்த வீதத்தில் நிர்வாகிக்கப்படும் என்றும் மத்திய வங்கி எதிர்பார்த்துள்ளது.

இது தவிர, சுற்றுலா பயணிகளின் வருகையும் 2023 ஆம் ஆண்டில் 1.5 மில்லியனைத் தொட்டது மற்றும் அதன் மூலமான வருவாய் 2.068 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...