பேச முடியாமல் திக்குமுக்காடிப் போன பைடன்:காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து கூச்சிலிட்ட பலஸ்தீனிய ஆதரவாளர்கள்.

Date:

இஸ்ரேலுடன் சேர்ந்து தொடரும் மனிதப்படுகொலைகளை நிறுத்தக் கோரி மனிதாபிமானமுள்ள அமெரிக்க மக்கள் பைடனின் சபையில் சத்தமிட்டு குறுக்கிட்டனர்.
“இங்கு இழந்த உயிர்களைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், நீங்கள் உயிர்களை மதிக்க வேண்டும், மேலும் பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்” என்று ஒரு பெண் கூச்சலிட்டார்
ஆரம்பத்தில் ஒரு சிலர் மட்டும் கோஷமிட்ட போதும் பிறகு முழு சபையும் சேர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கினார்.

இதனையடுத்து பைடன் மக்களுக்கு சொன்ன பதில், உங்கள் உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன் மற்றும் காசாவில் அதன் நடவடிக்கைகளை குறைக்க இஸ்ரேலை தள்ள என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்.

எவ்வாறாயினும்,  இஸ்ரேல் ஹமாஸ் போரில் 23,000 பேர் பலியாகியதுடன், பெரும்பாலும் பலஸ்தீனிய பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள்,பலியாகியுள்ளனர்.

 

பெருகிவரும் இறப்பு எண்ணிக்கை மற்றும் காசாவில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், பைடன்நிர்வாகம் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது குறித்து குறிப்பாக மக்களிடம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...