மின்சார கட்டணத்தை 3.3 வீதத்தினால் குறைக்க முன்மொழிவு!

Date:

மின்சார கட்டணத்தை 3.3 வீதத்தினால் குறைக்குமாறு மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளதாக ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை மின்சார சபை இந்த வருடம் 71,000 கோடி ரூபா இலாபம் ஈட்டுவதற்கு தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபை 13,500 கோடி ரூபாவை மறைந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்காது செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், 0 முதல் 30 மின்சார அலகுகளை இடைப்பட்ட பாவனையாளர்களின் கட்டணத்தை ஒரு ரூபாவினாலும் மாதாந்த கட்டணத்தை 25 ரூபாவினாலும் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், 31 முதல் 60 மின்சார அலகு வரை ஒரு மின்சார அலகுக்கான கட்டணம் 3 ரூபாவினாலும் மாதாந்த கட்டணம் 30 ரூபாவினாலும் குறைப்பதற்கு பரிந்துரைக்கட்டப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...