மின்சார கட்டணத்தை 3.3 வீதத்தினால் குறைக்க முன்மொழிவு!

Date:

மின்சார கட்டணத்தை 3.3 வீதத்தினால் குறைக்குமாறு மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளதாக ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை மின்சார சபை இந்த வருடம் 71,000 கோடி ரூபா இலாபம் ஈட்டுவதற்கு தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார சபை 13,500 கோடி ரூபாவை மறைந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்காது செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், 0 முதல் 30 மின்சார அலகுகளை இடைப்பட்ட பாவனையாளர்களின் கட்டணத்தை ஒரு ரூபாவினாலும் மாதாந்த கட்டணத்தை 25 ரூபாவினாலும் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன், 31 முதல் 60 மின்சார அலகு வரை ஒரு மின்சார அலகுக்கான கட்டணம் 3 ரூபாவினாலும் மாதாந்த கட்டணம் 30 ரூபாவினாலும் குறைப்பதற்கு பரிந்துரைக்கட்டப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...