ஹமாஸ் இன்னும் பலம் இழக்கவில்லை; இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் பலத்துடன் உள்ளனர்: புலனாய்வு அமைப்புகள் தகவல்

Date:

இஸ்ரேலின் மூன்று மாதகால தாக்குதலுக்கு பின்னர் ஹமாஸ் அமைப்பு வலுவிழக்கவில்லை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் பல மாதங்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு ஹமாஸ் அமைப்பு பலத்துடன் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

20 முதல் 30 சதவீத போராளிகளை மட்டுமே ஹமாஸ் அமைப்பு இழந்துள்ளதாகவும் ஹமாஸ் அமைப்பு இன்னும் வலுவுடன் உள்ளதாகவும் தனது தந்திரங்களை மாற்றியமைந்து தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களாக நடைபெறும் போரில் தமது தாக்குதல்களில் 16 ஆயிரம் ஹமாஸ் போராளிகள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் 10 ஆயிரத்து 500 முதல் 11 ஆயிரத்து 700 வரையான போராளிகளே காயமடைந்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மீண்டும் விரைவில் போர் களத்திற்கு திரும்பலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...