அவுஸ்திரேலிய புலம்பெயர் தமிழர்களை சந்தித்த ரணில்: முதலீடு செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

Date:

 இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் சில பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியுள்ளார்.

இலங்கை  பொருளாதார நிலைமைகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் முதலீடு செய்வது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

“நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அவுஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வுகள் பற்றிய எந்தவொரு பேச்சு வார்த்தையும் இன்றி வெறுமனே பொருளாதர அபிவிருத்தி பற்றியே ரணில் விக்கிரமசிங்க பேசியதாக அவுஸ்திரேவியாவில் உள்ள புலம்பெயர் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த புலம்பயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு தமிழர் தாயக பிரச்சினை தொடர்பாக சுட்டிக்காட்டிய போதும் அவர் அதனை கருத்தில் எடுக்கவிலலை என்றும் தெரிவிக்கப்டுபகின்றது.

 

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...