இணையப் பாதுகாப்புச் சட்டம் நாட்டிற்கு அவசியம்? அமைச்சர் அலி சப்ரி விளக்கம்!

Date:

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்குத் தெளிவான விளக்கத்தினை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவுக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே இவ்விடயம் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதன்போது இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் இருக்கின்ற சில உட்பிரிவுகள் குறித்து பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா தமது கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், அரசாங்கம் குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரதி இராஜாங்கச் செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

அத்துடன், குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு சிவில் அமைப்புக்களின் பரிந்துரைகளையும் உள்ளீர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதையும் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...