இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடத் தீர்மானம்!

Date:

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் அமைச்சரவையின் அனுமதியுடன் கைச்சாத்திடுவதற்கான  ஏற்படுகள் நிறைவிற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஏப்ரல் மாதம் குறித்த ஒப்பந்தம் நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்துடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2 மாதங்களுக்குள், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை நிறைவுக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகள் இடைவெளியின் பின்னர் இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு எட்கா ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையினை ஆரம்பித்திருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் 13 ஆவது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் மார்ச் மாதம் 10 மற்றும் 12 ஆம் திகதிகளில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று அமைச்சரவை அனுமதியின் பின்னர் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...