இந்திய துணை தூதரகத்துக்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Date:

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்துக்கு முன்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு மீனவ சங்கங்கள் இணைந்து இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடவுள்ளதாக முன்னதாக அறிவிப்பு விடுத்திருந்தமையினால் தூதரகத்துக்கு முன்பாக பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், மீனவர்கள் ஒன்று திரண்டு பேரணியாக சென்று துணைத் தூதரகத்தை முற்றுகையிட முற்பட்டபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மீனவ சங்க பிரதிநிதிகள் 8 பேர் மாத்திரம் தூதரகத்துக்கு சென்று துணைத் தூதுவரைச் சந்தித்து மனுவொன்றை கையளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்ததாக
தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்திய இழுவை படகு உரிமையாளர்களே எங்களையும் வாழ விடு, கடற்தொழிலாளர்களை பிரித்தாழும் தந்திரத்தை செய்யாதே, தொப்புள் கொடி உறவுகளை பிரிக்காதே, இந்திய அரசே இலங்கையின் வடபகுதி கடற்றொழிலாளர்களை திரும்பிப்பார், அத்து மீறும் இந்திய மீனவரின் அராஜகம் அடியோடு ஒழிய வேண்டும், சட்டவிரோத அத்துமீறலை தடுத்து நிறுத்து, வடக்கு கடற்றொழிலாளர்களின் வளங்களை சூறையாடாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...