இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வருகிறதா? ஹமாஸ் அமைப்பு முன்வைத்துள்ள விடயங்கள்!

Date:

இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினரின் துப்பாக்கிகள், பீரங்கிகள், போர் விமானங்கள், ஏவுகணைகளுக்கு ஓய்வு கொடுக்கும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.

கடந்த நான்கு மாதங்களாக நடந்து வரும் போர் முடிவுக்கு வருகிறதோ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஹமாஸ் அமைப்பு முன்வைத்துள்ள விடயங்கள். முன்னதாக அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் சார்பில் மத்தியஸ்தம் செய்யும் வகையில் கத்தார், எகிப்து நாடுகள் நேரடியாக ஹமாஸ் அமைப்பினரை சந்தித்து பேசி வருகின்றனர்.

கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையில் சில விடயங்கள் ஹமாஸ் அமைப்பினரிடம் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு பதில் என்னவென்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்தது. நேற்று இரவு இஸ்ரேல் வந்த அமெரிக்க செக்ரடரி ஆஃப் ஸ்டேட் ஆன்டனி பிலிங்கென், போர் குறித்து முக்கியமான விடயங்களை ஆலோசித்தது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ள பதிலில்,

மூன்று கட்டங்களாக போர் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

அதுவும் 45 நாட்கள் இடைவெளியில் மேற்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. முதல் கட்டத்தில் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து அனைத்து பலஸ்தீனிய பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட வேண்டும்.

இதற்கு பதிலாக காஸாவில் உள்ள பெண் பணயக் கைதிகள், 19 வயதுக்கு உட்பட்டவர்கள், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை விடுவிக்கப்படுவர். இரண்டாம் கட்டத்தில் எஞ்சிய ஆண் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவர்.

மூன்று கட்ட செயல்பாடுகள்

மூன்றாம் கட்டத்திலும் பணயக்  கைதிகள் பரிமாற்றம் நடைபெற வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் இறுதியில் இருதரப்பும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முன்வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர இஸ்ரேல் படைகள் முழுவதுமாக வெளியேற வேண்டும். இறந்தவர்களின் உடல்களும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக காஸாவில் மறுகட்டமைப்பு பணிகள் தொடக்கப்படும் எனத் தெரிகிறது. இத்தகைய நடவடிக்கைகள் போரை முடிவுக்கு கொண்டு வரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி போரின் தொடக்கமாக இருந்ததே ஹமாஸ் அமைப்பினர் தான் என்பதை நினைவு கூற வேண்டியுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகள் மீது நிலம், நீர், ஆகாயம் என மும்முனை தாக்குதலை ஹமாஸ் அமைப்பினர் அதிரடியாக தொடுத்தனர்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...