எரிபொருள் விலை அதிகரிப்பு: பஸ் கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்குமாறு கோரிக்கை

Date:

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பஸ்  சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் இன்று (01) கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

10% பஸ் கட்டண திருத்தம் அவசியம் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை வேன் கட்டணங்கள் தொடர்பில் பெற்றோருடன் கலந்துரையாடி தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கு அதன் உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்கப்போவதில்லை என  முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...