இஸ்ரேல் – காஸா இடையிலான போர் 143வது நாளை எட்டியுள்ளது. ஹமாஸ் படையினரை ஒடுக்க நினைத்து, ஒட்டுமொத்த காஸா பகுதியையும் உருக்குலைத்து வருகிறது இஸ்ரேல் இராணுவம்.
ரஷ்யா – உக்ரைன் போரை விட காஸா மீதான தாக்குதல் மிகவும் கொடூரமாக அரங்கேறி வருகிறது. இதை இனப் படுகொலை என்று சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
காஸாவின் உள்கட்டமைப்பு வசதிகள் தரைமட்டமாகி வரும் சூழலில் அடிப்படை தேவைகளுக்கு பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு காஸாவில் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள் பசியுடன் இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு கிடைக்கவில்லை. விலங்குகள் உண்ணும் உணவை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதற்கு ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளும் நிலை காணப்படுகிறதாம். இத்தகைய சூழலை காஸா தனது வரலாற்றில் ஒருபோதும் கண்டதில்லை என அரசியல் பார்வையாளர்கள் வேதனையுடன் பதிவு செய்கின்றனர்.
இந்நிலையில் தங்களது உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ள தெற்கு காஸா பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளனர்.
போதிய எரிபொருளும் கிடைக்கவில்லை. இதனால் பலர் நடந்தே இடம்பெயர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி காஸா மக்கள் கூறுகையில், வடக்கு பகுதியில் வாழ்வது மிகவும் கடினமாக மாறியுள்ளது. இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களை எதிர்கொள்ள தயங்கவில்லை. மோசமான அரசியல் சூழலுக்கு அஞ்சவில்லை. எங்களால் பசியை தாங்க முடியவில்லை.
https://twitter.com/UNRWA/status/1762064318558842961?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1762064318558842961%7Ctwgr%5Ef1a9bc2bfd6f6e95202157e33f9f9a13097a9b58%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Finternational-news%2Fhungry-palestinians-from-north-to-south-gaza-to-seeking-food-amid-israel-war%2Farticleshow%2F108012461.cms