குப்பி விளக்கு சர்ச்சை: மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா

Date:

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதற்காக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்த தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் தளத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்தவின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில்,ஊடகப் பேச்சாளர் தனது பதவியை இராஜினாமா செய்ததோடு, தனது கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளார்.

சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், தேவை ஏற்பட்டால் குப்பி விளக்குகளைப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என நோயல் பிரியந்த தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...