சவூதியில் 1000 தாதியர் வெற்றிடங்களுக்கான நேர்காணல்கள் கொழும்பில்..!.

Date:

சவூதி அரேபியாவில் உள்ள தாதியர் வேலைக்கான வெற்றிடங்களுக்கு இலங்கையிலிருந்து தாதியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார திவான் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்த நேர்காணல்களின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார்.

முதல் சுற்றில் தாதியர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நேர்முகத் தேர்வில் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஏராளமான தாதியர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டாவது சுற்றில், தாதியர் டிப்ளோமா பெற்றவர் தாதியர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் சுகாதாரத் துறையில் உள்ள ஆயிரம் தாதியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் நடத்தப்படுகிறது.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...