ஜனாதிபதி பதவிக்காலம் இவ்வருடம் நவம்பர் மாதத்துடன் நிறைவடையும்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

Date:

இந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.

அதன்படி, ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போடுவதாக இருந்தால் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டியது அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக இந்த வருடம் தேசிய தேர்தல்கள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் நிறைவடையும். அதனை தொடர்ந்து மனுத்தாக்குதலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...