ஜனாதிபதி பதவிக்காலம் இவ்வருடம் நவம்பர் மாதத்துடன் நிறைவடையும்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

Date:

இந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஜனாதிபதி பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.

அதன்படி, ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் திகதியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போடுவதாக இருந்தால் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டியது அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக இந்த வருடம் தேசிய தேர்தல்கள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் நிறைவடையும். அதனை தொடர்ந்து மனுத்தாக்குதலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...