நாசர் மருத்துவமனை முழுமையாக ஸ்தம்பிதம்: மருத்துவமனை பணிப்பாளர் தடுத்து வைத்து விசாரணை

Date:

காஸாவின் கான் யூனுஸ் பிரதேச நாசர் மருத்துவமனை முற்றிலுமாக செயலிழந்த நிலையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அதனை ஆக்கிரமித்ததோடு மருத்துவமனை பணிப்பாளரை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளது.

காசாவில் ஹமாஸ் இஸ்ரேலிடையே போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு காசாவில் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையில் நேற்று அதிகாலை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது.

அப்போது நோயாளி ஒருவர் கொல்லப்பட்டார். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு முன்னதாக மருத்துவமனையில் இருந்து பொதுமக்களும் நோயாளிகளும் வெளியேறுவதற்கு தனி பாதை திறந்து வைத்தனர் ராணுவத்தினர்.

கடந்த சில நாட்களாக இந்த மருத்துவமனை நகரின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த மருத்துவமனையில் பணயக் கைதிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

(அல்ஜஸீரா)

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...