பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான்கான் ஆதரவு சுயேட்சை கட்சிகள் முன்னிலையில்

Date:

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் சற்று முன்னர் வரை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

336 இடங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் 266 வேட்பாளர்கள் நேரடி வாக்களிப்பு மூலம் தேந்தெடுக்கப்படவுள்ளனர்.

மீதமுள்ள 70 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கப்பட்ட இடங்களில், 60 பெண்களுக்கும், 10 முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை சட்டமன்றத்தில் ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒரு தனிப்பெரும்பான்மையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 133 இடங்கள் தேவை, ஆனால் தேர்தல் முடிவு ஒரு தீர்க்கமான வெற்றியை அளிக்காது என்று பல ஆய்வாளர்களால் ஊகிக்கப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்புடன் (PTI) இணைந்த சுயேட்சை கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன.

அவர்கள் 49 இடங்களை கைப்பற்றியதாக தேசிய தேர்தல்கள் ஆணையக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி 39 இடங்களை கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 30 இடங்களில் உள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இஸ்லாமாபாத் பொலிஸார் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து தலைநகரில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...