புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதிக்கான பிரவேச பரீட்சை!

Date:

புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரிக்கு 2024ம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான பிரவேச பரீட்சை மார்ச் மாதம் 10 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 க்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

பரீட்சையில் கலந்து கொள்பவர்களுக்கான தகைமைகள், 2024 அரசாங்க அல்லது தனியார் பாடசாலை ஒன்றில் தற்போது 9ம் தரத்தில் தமிழ் மொழியில் கற்றுக்கொண்டிருத்தல்.

ஷரீஆ துறை கல்வியையும் பாடசாலை கல்வியையும் சேர்த்து கற்பதில் ஆர்வமும் திறமையும் இருத்தல்.

பிரவேசப்பரீட்சையில் சித்திபெறுவோர் குறித்த பாடநெறிகளை கற்று அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றி உள்நாட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை பெறுவதற்கு ஏழு ஆண்டுகளில் தகைமை பெறுவர்.

க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகள், அல் ஆலிம் மற்றும் மௌலவி (சாதாரண தரம், உயர் தரம்), தர்மாசார்யா மற்றும் அஹதிய்யா, அரபு , தமிழ் , ஆங்கிலம் , சிங்களம் மொழிகள், தொழிற்பயிற்சி பாடங்கள் ஆகியனவாகும்.

பரீட்சையில் கலந்து விருப்பமுடையவர்கள் தான் கற்கும் தரத்தை உறுதிப்படுத்திய பாடசாலை அதிபரின் கடிதத்துடன் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் 0322265738/ 0774257372 / 0774377788.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...