மின்சார சபை பேச்சாளருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி

Date:

இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

விசாரணையின் பின்னர் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குப்பி விளக்கு வெளிச்சத்தில் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என கூறிய இலங்கை மின்சார சபையின் பேச்சாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

செய்தித் தொடர்பாளரைத் இடைநீக்கம் செய்து விசாரணையைத் தொடங்குமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...