யாருடைய சுதந்திரத்தை கொண்டாடுகிறீர்கள்?: பேராயர் கேள்வி

Date:

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அடக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் எனவும் சரியான தலைவரை நாட்டுக்கு தெரிவு செய்ய வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர்  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு திருப்பலி பூஜையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. யாருடைய சுதந்திரத்தை கொண்டாடுகிறீர்கள் என்று தலைவர்களிடம் கேட்கிறேன்.

ஆட்சியாளர்களின் சுதந்திரத்தையா? அல்லது மக்களின் சுதந்திரத்தையா? வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்து வருகின்றனர்.

பிரபுக்கள் முன்னிலையில் பட்டினியல் இருக்கும் மக்களை அவமானப்படுத்துவது சுதந்திரமா?அழகான எமது தாய் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்டம்.

அடக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்த நாட்டை மீட்க வேண்டும்.சரியான தலைவரை நாட்டுக்கு தெரிவு செய்ய வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...