அனுரவின் இந்திய விஜயம்: ‘நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிக்கிறது’

Date:

மக்கள் விடுதலை முன்னணியின் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இன்று தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்திய விஜயத்திலிருந்து நாம் சேகரிக்கக்கூடியது என்னவென்றால், அவரது கட்சி நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிக்கிறது” என மரிக்கார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி முக்கிய எதிர்க்கட்சியாக மாறுவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை, ஏனெனில் அவர்கள் இந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக மாறும்போது நாங்கள் அரசாங்கத்தில் இருப்போம்” என்றார்.

“எவ்வாறிருப்பினும், இந்திய விஜயம் ஒரு சாதகமான நடவடிக்கை என்று நாங்கள் உணர்கிறோம். முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொண்டு அவர் திரும்பி வந்திருக்க வேண்டும், ”என மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...