அனுரவின் இந்திய விஜயம்: ‘நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிக்கிறது’

Date:

மக்கள் விடுதலை முன்னணியின் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இன்று தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்திய விஜயத்திலிருந்து நாம் சேகரிக்கக்கூடியது என்னவென்றால், அவரது கட்சி நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக மாற முயற்சிக்கிறது” என மரிக்கார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி முக்கிய எதிர்க்கட்சியாக மாறுவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை, ஏனெனில் அவர்கள் இந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக மாறும்போது நாங்கள் அரசாங்கத்தில் இருப்போம்” என்றார்.

“எவ்வாறிருப்பினும், இந்திய விஜயம் ஒரு சாதகமான நடவடிக்கை என்று நாங்கள் உணர்கிறோம். முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு உறவுகள் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொண்டு அவர் திரும்பி வந்திருக்க வேண்டும், ”என மரிக்கார் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...