அவுஸ்திரேலிய புலம்பெயர் தமிழர்களை சந்தித்த ரணில்: முதலீடு செய்வது தொடர்பாக கலந்துரையாடல்

Date:

 இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் சில பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியுள்ளார்.

இலங்கை  பொருளாதார நிலைமைகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகள் முதலீடு செய்வது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க உரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

“நிரந்தரமான மற்றும் நிலையான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப்பொருளில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அவுஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வுகள் பற்றிய எந்தவொரு பேச்சு வார்த்தையும் இன்றி வெறுமனே பொருளாதர அபிவிருத்தி பற்றியே ரணில் விக்கிரமசிங்க பேசியதாக அவுஸ்திரேவியாவில் உள்ள புலம்பெயர் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த புலம்பயர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு தமிழர் தாயக பிரச்சினை தொடர்பாக சுட்டிக்காட்டிய போதும் அவர் அதனை கருத்தில் எடுக்கவிலலை என்றும் தெரிவிக்கப்டுபகின்றது.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...