நாட்டின் சில பகுதிகளில் இன்று (18) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.