‘இலங்கையின் சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு’:தேசிய ஷூரா சபையின் விசேட நிகழ்வு

Date:

76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘இலங்கையின் சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்ற தொனிப்பொருளில் தேசிய ஷூரா சபை விஷேட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
கொழும்பு, ஜே.ஆர்.ஜயவர்தன நிலையத்தில் எதிர்வரும் 07ஆம் திகதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறும்.

தேசிய ஷூரா சபை தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர், தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பெளத்த ஆய்வுகளுக்கான வல்பொல ராகுல நிலைய பணிப்பாளர் கல்கந்தே தம்மானந்த தேரர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டு தூதுவர்), அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் [நளீமி] பீடாதிபதி, இஸ்லாமிய கற்கைநெறிகள் பீடம் ஜாமிஆ நளீமிய்யா ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

இந்நிகழ்வில் தேசிய நலனில் முஸ்லிம்களின் பங்களிப்பினை பறைசாற்றும் இவ்வரலாற்று நிகழ்வில் பல்வேறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மஜ்லிஸ் அங்கத்தவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் சமூக நலன் அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினர் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...