இலங்கை சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு:தேசிய ஷூரா சபை நடாத்திய விஷேட நிகழ்வு

Date:

இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘இலங்கையின் சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்ற தொனிப்பொருளில் தேசிய ஷூரா சபையால் விஷேட நிகழ்வொன்று நேற்று கொழும்பு, ஜே.ஆர்.ஜயவர்தன நிலையத்தில் இடம்பெற்றது.

தேசிய ஷூரா சபை தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர், தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களால் கிராஅத் ஓதப்பட்டு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

இதனையடுத்து பெளத்த ஆய்வுகளுக்கான வல்பொல ராகுல நிலைய பணிப்பாளர் கல்கந்தே தம்மானந்த தேரர் பிரதான உரை நிகழ்த்தினார்.

மேலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், வெளிநாட்டு தூதுவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர், ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய கற்கைநெறிகள் பீடத்தின் பீடாதிபதி அஷ்ஷைக் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி) ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் தேசிய நலனில் முஸ்லிம்களின் பங்களிப்பினை பறைசாற்றும் வகையில் பல்வேறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மஜ்லிஸ் அங்கத்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சமூக நலன் அமைப்புகள் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...