கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி மீது தாக்குதல்: பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம்

Date:

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை கூட்டத்தில்   திணைக்கள அதிகாரி ஒருவர்  ஆசிரிய சங்க உறுப்பினரால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் இன்று குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலான மேன்முறையீட்டுச்சபை கூட்டம் கூடப்பட்ட பேது, அதில் பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கும் ஆசிரியர் சேவை சங்க உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பேது, கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி , ஆசிரிய சங்க உறுப்பினரால் தாக்கப்பட்டதோடு அதிகாரி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

அதனை கண்டிக்கும் முகமாகவே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் விடயம் தொடர்பிலான மகஜர் ஒன்று கிழக்கு மாகாண கல்வித் திணைக்களச் செயலாளரிடம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...