கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி மீது தாக்குதல்: பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம்

Date:

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை கூட்டத்தில்   திணைக்கள அதிகாரி ஒருவர்  ஆசிரிய சங்க உறுப்பினரால் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் இன்று குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆசிரிய இடமாற்றம் தொடர்பிலான மேன்முறையீட்டுச்சபை கூட்டம் கூடப்பட்ட பேது, அதில் பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கும் ஆசிரியர் சேவை சங்க உறுப்பினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பேது, கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி , ஆசிரிய சங்க உறுப்பினரால் தாக்கப்பட்டதோடு அதிகாரி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

அதனை கண்டிக்கும் முகமாகவே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் விடயம் தொடர்பிலான மகஜர் ஒன்று கிழக்கு மாகாண கல்வித் திணைக்களச் செயலாளரிடம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...