குறிவைத்து தாக்கும் இஸ்ரேல்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Date:

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேலானது தரைவழித் தாக்குதலை ரஃபா நகரில் நடத்தப்போவதாக அறிவித்ததிலிருந்து, காஸா மீதான குண்டுவீச்சுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே காணப்படுகின்றது.

மத்திய காசாவில், குடியிருப்பு பகுதியில் குண்டு வெடித்ததில் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் வெளியாகாத நிலையில் தான், தெற்கு கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையைச் சுற்றி, இஸ்ரேலிய படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஸ்னைப்பர் தாக்குதல்களில் 21 பலஸ்தீனிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தோடு மருத்துவமனையின் மேற்கூரையில் திரண்டிருந்த இளைஞர்கள் குழுவையும் தாக்க இஸ்ரேலிய ட்ரோன்கள் குறிவைத்துள்ளன. குடும்பத்தினருடன் தகவல் தொடர்பை மேற்கொள்ள முயன்ற குழுவினரே இவ்வாறு குறிவைக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களினால் இதுவரையில் காஸாவில் 27,947 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...