வரட்சி காலநிலையால் நீர் மட்டம் குறைவடைந்துள்ள நிலையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (WSDB) களனி ஆற்றின் குறுக்கே உப்புத் தடுப்பை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
தடுப்புச்சுவர் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே இடம்பெற்று வருவதாக பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், “தற்போதைக்கு நீர் கொள்ளளவை பயன்படுத்தி நீர் விநியோகம் தொடரும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் நீர் ஆதாரங்களில் நீடித்த வரட்சியான காலநிலையின் தாக்கம் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரட்சியான காலநிலையால் “தண்ணீர் நுகர்வு அதிகரித்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், நுகர்வோரை “நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.