புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதிக்கான பிரவேச பரீட்சை!

Date:

புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரிக்கு 2024ம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான பிரவேச பரீட்சை மார்ச் மாதம் 10 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 க்கு கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

பரீட்சையில் கலந்து கொள்பவர்களுக்கான தகைமைகள், 2024 அரசாங்க அல்லது தனியார் பாடசாலை ஒன்றில் தற்போது 9ம் தரத்தில் தமிழ் மொழியில் கற்றுக்கொண்டிருத்தல்.

ஷரீஆ துறை கல்வியையும் பாடசாலை கல்வியையும் சேர்த்து கற்பதில் ஆர்வமும் திறமையும் இருத்தல்.

பிரவேசப்பரீட்சையில் சித்திபெறுவோர் குறித்த பாடநெறிகளை கற்று அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றி உள்நாட்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை பெறுவதற்கு ஏழு ஆண்டுகளில் தகைமை பெறுவர்.

க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரம் பரீட்சைகள், அல் ஆலிம் மற்றும் மௌலவி (சாதாரண தரம், உயர் தரம்), தர்மாசார்யா மற்றும் அஹதிய்யா, அரபு , தமிழ் , ஆங்கிலம் , சிங்களம் மொழிகள், தொழிற்பயிற்சி பாடங்கள் ஆகியனவாகும்.

பரீட்சையில் கலந்து விருப்பமுடையவர்கள் தான் கற்கும் தரத்தை உறுதிப்படுத்திய பாடசாலை அதிபரின் கடிதத்துடன் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் 0322265738/ 0774257372 / 0774377788.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...