மக்களை மௌனமாக்கும் இணையவழிப் பாதுகாப்புச் சட்டம்:மார்ச் 12 இயக்கம்

Date:

மக்களை மௌனமாக்குவதற்காகவும் மக்களின் கருத்துக்களை ஒடுக்குவதற்காக இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் மூலம் அடிப்படை உரிமைகளிற்கு மிகவும் ஆபத்தானது என்பதையும் இலங்கையின் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக கொள்கைகளிற்கு ஆபத்தானது என்பதையும் நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போதைய அரசாங்கம் இந்த சட்டமூலத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் காண்பிக்கும் முயற்சி மிக முக்கியமான பொருளாதார சீர்திருத்த மற்றும் எதிர்வரும் தேர்தல் காலங்களில் கருத்து வேறுபாடுகளை கொண்டவர்களை மௌனமாக்கும் சிவில் செயற்பாடுகளை ஒடுக்கும் அரசாங்கத்தின் நோக்கங்கள் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன.

இதேவேளை அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு சமாளிக்க முடியாத  மக்கள் மத்தியில் மௌனமாக துயரத்தை அனுபவிக்கும் அதேவேளை, ஆட்சியாளர்கள் இந்த மௌனம் கீழ்படிதல் என கருதக்கூடாது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...