யாருடைய சுதந்திரத்தை கொண்டாடுகிறீர்கள்?: பேராயர் கேள்வி

Date:

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அடக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் எனவும் சரியான தலைவரை நாட்டுக்கு தெரிவு செய்ய வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர்  கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு திருப்பலி பூஜையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. யாருடைய சுதந்திரத்தை கொண்டாடுகிறீர்கள் என்று தலைவர்களிடம் கேட்கிறேன்.

ஆட்சியாளர்களின் சுதந்திரத்தையா? அல்லது மக்களின் சுதந்திரத்தையா? வெளிநாட்டு பிரதிநிதிகளை அழைத்து வருகின்றனர்.

பிரபுக்கள் முன்னிலையில் பட்டினியல் இருக்கும் மக்களை அவமானப்படுத்துவது சுதந்திரமா?அழகான எமது தாய் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்டம்.

அடக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்த நாட்டை மீட்க வேண்டும்.சரியான தலைவரை நாட்டுக்கு தெரிவு செய்ய வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...